on Friday, December 01, 2006
என் அன்பிற்குரிய சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்களிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது.. என் மீது மிகுந்த அன்புடைய உன்னத உயிர் வாப்பா அப்துல் ஜப்பார் அவர்கள்,அவர் அனுப்பிய மின்னஞ்சலில் உங்களுடைய கவிதைகள் சிலவற்றை சமநிலை சமுதாயம் இதழில் வெளியிட்டுள்ளார்கள் அவற்றை உலகத் தமிழ்ச் செய்தி ( http://www.worldtamilnews.com/ ) இணைய வானொலி தமிழ்க்குரலில் எனது குரலில் பதிவு செய்துள்ளேன் கேட்டுப்பார் என்று எழுதியிருந்தார்.உலகத் தமிழ்ச் செய்தி இணைய வானொலி மதுரா டிராவல்ஸ் வி.கே.டி.பாலன் அண்ணாச்சி அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது. செய்திகள், கதை, கவிதை, நிகழ்ச்சித்தொகுப்புகள், இலக்கிய சொற்பொழிவுகள் என பலவற்றை ஒலி வடிவில் தருகிறது.அந்த இணைய வானொலியில் ஏற்கெனவே எனது காதலாகி கவிதை தொகுப்பு அறிவுமதி அவர்களின் அணிந்துரை, என்னுரை ஆகியவற்றோடு அப்துல் ஜப்பார் அவர்களின் குரலில் ஒலிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.மீண்டும் எனது கவிதைகள் இணைய வானொலியில் ஒலிபரப்பாவது மகிழ்வளிக்கிறது. முடிந்தால் நண்பர்கள் கேட்டுப்பாருங்கள்.

0 comments: